Thursday, September 11, 2025
Homeஇலங்கைமன விரக்தியில் மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டி தற்கொலை செய்த முன்னாள் பெண் போராளி

மன விரக்தியில் மண்ணெண்ணெய் ஊற்றி தீமூட்டி தற்கொலை செய்த முன்னாள் பெண் போராளி

யாழில் திருமணமாகாத முன்னாள் பெண் போராளி ஒருவர் தவறான முடிவெடுத்து இன்றையதினம் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சிறீஸ்கந்தராசா தவரூபி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், இவர் தனது சகோதரியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மன விரக்தியில் இன்று மதியம் உணவருந்திய பின்னர் தனக்குத்தானே மண்ணெண்ணெயை ஊற்றி தீமூட்டி உயிர்மாய்த்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:  இரத்தினபுரி - அவிசாவளை வீதியில் பஸ் - லொறி மோதி விபத்து ; பலர் காயம்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!