Saturday, April 19, 2025
Homeஇலங்கைமின்சார தூண் உடைந்து வீழ்ந்ததில் மூவர் காயம்

மின்சார தூண் உடைந்து வீழ்ந்ததில் மூவர் காயம்

மொனராகலை, செவனகல பகுதியில் மின்சார தூண் ஒன்று உடைந்து விழுந்ததில் மின்சார சபையின் மூன்று ஊழியர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமானதால் எம்பிபிட்டிய மாவட்ட வைத்தியசாலையில் இருந்து கராபிட்டிய தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த ஊழியர்கள் மின்சார தூண்களை பொருத்திக் கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்தது.இந்த சம்பவத்தில் எம்பிலிபிட்டிய அலுவலகத்தில் பணிபுரியும் மூன்று மின்சார ஊழியர்களே காயமடைந்தனர்.அந்த நேரத்தில், ஒரு ஊழியர் ஒரு மின் கம்பத்தின் மேல் நின்று மின் கம்பிகளைப் பொருத்திக் கொண்டிருந்தபோது, ​​அந்தக் தூணின் நடுப்பகுதி உடைந்து தரையில் விழுந்ததுள்ளது.தரமற்ற மின்சார தூண்களை பயன்படுத்துவதால் இது போன்ற விபத்துகள் ஏற்படுவதாக பிரதேசவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதையும் படியுங்கள்:  முட்டை விலை மீண்டும் உயர்வு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!