Sunday, June 8, 2025
Homeஇலங்கையாழில் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை உட்கொண்ட முதியவர் உயிரிழப்பு

யாழில் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை உட்கொண்ட முதியவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்ட முதியவர் ஒருவர் சனிக்கிழமை (07) உயிரிழந்துள்ளார்.இதன்போது கீரிமலை வீதி, சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த 77 வயதுடைய முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்

குறித்த முதியவர் கடந்த நான்காம் திகதி மதுபோதையில் மருத்துவ மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டுள்ளார். பின்னர் அவரது மனைவி அதிகாலை அவரை எழுப்பியுள்ளார். அவர் மயக்கம் அடைந்து காணப்பட்டதால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.தொடர்ந்து மயக்க நிலையிலேயே காணப்பட்ட குறித்த முதியவர் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை (08) உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டார். மாத்திரைகளை அளவுக்கதிகமாக உட்கொண்டதால் மரணம் சம்பாதித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

இதையும் படியுங்கள்:  யாழ். மாவட்டத்தில் க.பொ.த உயர்தரத்தில் உயிரியல் பிரிவில் சாதனை படைத்த இரட்டையர்கள்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!