Monday, July 14, 2025
Homeஇலங்கையாழ்.நெடுந்தீவில் கைதான 07 தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல்

யாழ்.நெடுந்தீவில் கைதான 07 தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல்

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஞாயிற்றுக்கிழமை (13) கைது செய்யப்பட்ட 07 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 25ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.இலங்கை கடற்படையினர் கடலில் மேற்கொண்ட சுற்றுவளைப்பு நடவடிக்கையின் போது, நெடுந்தீவை அண்டிய கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்களை கைது செய்தனர். இதன்போது அவர்களின் படகினையும் கடற்படையினர் கைப்பற்றினர்.கைதான மீனவர்களையும், படகினையும் மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு சென்ற கடற்படையினர், மீனவர்களை மேலதிக ச‌‌ட்ட நடவடிக்கைக்காக கடற்தொழிலில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.இதனை அடுத்து மீனவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையும் படியுங்கள்:  ஓமன் நாட்டிற்கு சென்ற பெண் அவர் அனுபவித்த கொடுமைகள்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!