Home » ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் இலங்கை கடற்படையால் கைது

ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் இலங்கை கடற்படையால் கைது

by newsteam
0 comments
ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் இலங்கை கடற்படையால் கைது

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.இந்திய எல்லையை மீறி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை இந்த கைது நடவடிக்கையை எடுத்துள்ளது. இச்சம்பவத்தில், அவர்களது 3 மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும், மற்றொரு சம்பவத்தில் 14 மீனவர்களை சிறைபிடித்து தலைமன்னார் கடற்படை முகாமிற்கு இலங்கை கடற்படை அழைத்து சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று ஒரே நாளில் மொத்தம் 32 மீனவர்களும், 5 படகுகளும் இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த சம்பவம், ராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதான மீனவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!