Home » வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

by newsteam
0 comments
வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துச் செய்தி.

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டைக் கொண்டாடும் இந்த வேளையில், வடக்கு மாகாண மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்தப் பாரம்பரிய சித்திரைப் புத்தாண்டு புதுப்பித்தல், ஒற்றுமை மற்றும் நம்பிக்கைக்கான வாய்ப்பையும் குறிக்கின்றது. இந்தப் பண்டிகைக் காலம் ஒவ்வொரு வீட்டுக்கும் அமைதி, செழிப்பு, நல்ல ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியைக் கொண்டுவருவதாக அமையட்டும்.
ஒற்றுமை, கலாசார நல்லிணக்கம் மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றின் உணர்வோடு இந்தப் பண்டிகையை ஏற்றுக்கொள்வோம். இந்தப் பண்டிகை நாளில், எமது வளமான கலாசார பாரம்பரியத்தைக் கொண்டாடுவோம். சமூகங்களை ஒன்றிணைக்கும் பிணைப்புகளை வலுப்படுத்துவோம்.கடந்த காலங்களில் பின்னடைவைச் சந்திருந்த எமது நாடும், மாகாணமும் மீண்டெழுந்து வரும் இந்தத் தருணத்தில் புதிய உற்சாகத்துடன் பண்டிகையைக் கொண்டாடும் நாம், எதிர்காலத்தில் சிறப்பான இலக்கை அடைவதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். அனைவருக்கும் இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

You may also like

Leave a Comment

error: Content is protected !!