Home » வவுனியாவில் குளக்கரையில் இருந்து இளைஞரின் சடலம் மீட்பு

வவுனியாவில் குளக்கரையில் இருந்து இளைஞரின் சடலம் மீட்பு

by newsteam
0 comments
வவுனியாவில் குளக்கரையில் இருந்து இளைஞரின் சடலம் மீட்பு

வவுனியா, பாவற்குளத்தின் சூடுவெந்தபுலவு அலைகரைப் பகுதியில் இருந்து இரத்தக் கறைகளுடன் இளைஞரின் சடலம் ஒன்றை உளுக்குளம் பொலிஸார் இன்று (16) மீட்டுள்ளனர்.குறித்த பகுதியில் அமைந்துள்ள குளத்தின் அலைகரைப் பகுதியில் சடலம் ஒன்று உள்ளமை தொடர்பாக அப் பகுதியில் மீன் பிடிக்கச் சென்றவர்களால் உளுக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்ட இளைஞர் வவுனியா விநாயகபுரத்தை சேர்ந்த 33 வயதுடைய கோபிதாசன் என பொலிஸார் தெரிவித்தனர். அவர் புதுவருட தினமான கடந்த 14 ஆம் திகதியில் இருந்து காணாமல் போயிருந்ததாக அவரது குடும்பத்தினரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மீட்கப்பட்ட சடலத்தில் இரத்தக்கறைகள் படிந்துள்ள நிலையில் பல்வேறு கோணங்களில் உளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!