Home இலங்கை வாகரை பகுதியில் அதீத வேகத்தால் பறிபோன இரு இளைஞர்களின் உயிரிழப்பு

வாகரை பகுதியில் அதீத வேகத்தால் பறிபோன இரு இளைஞர்களின் உயிரிழப்பு

0
வாகரை பகுதியில் அதீத வேகத்தால் பறிபோன இரு இளைஞர்களின் உயிரிழப்பு

வாகரை பொலிஸ் பிரிவிற்க்குட்பட்ட பனிச்சங்கேணி பகுதியில் நேற்று (25) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.மூன்று மோட்டார் சைக்கிளில் ஆறு நண்பர்கள் கிண்ணியாவுக்கு சென்று ஓட்டமாவடி பகுதியை நோக்கி சென்ற போதே விபத்தில் சிக்கி இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பனிச்சங்கேணி பாலத்துடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இதில், ஓட்டமாவடி – பதுரியா நகர் ஆலையடி பகுதி மற்றும் ஓட்டமாவடி சூடுபத்தினசேனை பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்த இரு இளைஞர்களின் உடல்களும் வாகரை வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பின்னர் நள்ளிரவு 2 மணியளவில் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டன.
உயிரிழந்த இரு இளைஞர்களின் உடல்களும் பரிசோதனை நடவடிக்கைகளுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version