காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் இராணுவ அதிகாரியை திட்டும் காணொளி ஒன்று தற்போது சமூக சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.இந்த காணொளி தொடர்பாக, பதில் காவல்துறை மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி பதில் காவல்துறை மா அதிபரின் பணிப்புரையின் பேரில் கண்டி மாவட்டம் பிரிவு 1க்கு பொறுப்பான காவல்துறை அத்தியட்சகர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் விசாரணையின் போது தெரியவரும் உண்மைகளின் பிரகாரம் சம்பந்தப்பட்ட காவல்துறை உத்தியோகத்தருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என தெரியவந்துள்ளது.