Saturday, June 21, 2025
Homeஇலங்கைகாதல் உறவில் இருந்த பல்கலைக்கழக யுவதியின் நிர்வாண படங்களை பதிவேற்றிய முன்னாள் காதலன்

காதல் உறவில் இருந்த பல்கலைக்கழக யுவதியின் நிர்வாண படங்களை பதிவேற்றிய முன்னாள் காதலன்

நான்கு வருடங்களாக காதல் உறவில் இருந்த பல்கலைக்கழக மாணவியான, இளம் பெண்ணின் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.மத்தேகொட, குடமடுவ வீதி, சிஷில் செவன பூங்காவில் வசிக்கும் நபரை கைது செய்ததாகவும் கணினி குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
நான்கு வருடங்களாக காதல் உறவில் இருந்த இளம் பெண் காதலை முறித்துகொண்ட நிலையில் ட்யுவதியின் தகாத புகைப்படங்களை சந்தேக நபர் பதிவேற்றியுள்ளார்.சந்தேக நபர் மற்றொரு பெண்ணின் நிர்வாண புகைப்படங்கள் மற்றும் ஆபாச வீடியோக்கள் அடங்கிய மொபைல் போன் மற்றும் மடிக்கணினியுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.தெற்கு மாகாணத்தைச் சேர்ந்த 26 வயதான யுவதி, மேலதிக கல்விக்காக 2022 ஆம் ஆண்டு ஹோமகமவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார்.அதே பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது, ​​ மாணவி சந்தேக நபரை சந்தித்து பின்னர் காதல் உறவை வளர்த்துக் கொண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதையும் படியுங்கள்:  உயிரை பணயம் வைத்து பயணம் செய்யும் கிரான் பிரதேச மக்கள்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!