மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கட்டுடை பகுதியில் திங்கட்கிழமை (23) குடும்பஸ்தர் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த குடும்பஸ்தர் பிள்ளைகளை பாடசாலையில் விட்டு திரும்பி வந்துகொண்டிருந்தவேளை ஒரு மோட்டார் சைக்கிளில், முகங்களை மறைத்தவாறு வந்த இருவர் குறித்த குடும்பஸ்தரின் கண்களினுள் மிளகாய் தூள் வீசினர்.
அதன் பின்னர் அவர்மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொண்டு பின்னர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றனர்.பின்னர் படுகாயமடைந்த குறித்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டதுடன் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.