Saturday, April 19, 2025
Homeஇலங்கைகாப்பாற்றிய பின்பும் மீண்டும் குளத்தில் குதித்து காணாமல் போன நபர் - தேடும் பணியில் இளைஞர்கள்

காப்பாற்றிய பின்பும் மீண்டும் குளத்தில் குதித்து காணாமல் போன நபர் – தேடும் பணியில் இளைஞர்கள்

மதுபோதையில் குளத்தில் பாய்ந்த நபரை காப்பாற்றிய பின்பும் மீண்டும் குளத்தில் குதித்து காணாமல் போன சம்பவம் கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது.கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பகுதியில் இன்றைய தினம் 29.01.2025 ஆலயத்தின் தீர்த்தோற்சவ நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.மது போதையில் அப்பகுதிக்கு சென்ற நபர் ஓருவர் குளத்தில் பாய்ந்துள்ளார். சிலர் அவரை தூக்கி வெளியில் எடுத்த பொழுது மீண்டும் குளத்தில் பாய்ந்துள்ளார்.குறித்த நபர் பல மணி நேரம் மேலே வராத நிலையில், அப்பகுதி இளைஞர்கள் காணாமல் போனவரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய கணேசமூர்த்தி ரமேஷ் எனும் இளம் குடும்பஸ்தரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

இதையும் படியுங்கள்:  மட்டக்களப்பு காட்டுபகுதியில் சடலமாக மீட்கப்பட்ட ஆண் குழந்தை
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!