காத்தான்குடி பிரதேச செயலக அபிவிருத்திக்குழுக் கூட்டம் இன்று (10) பிரதேச செயலாளர் நிஹாரா மொஜுத் அவர்களின் வழிநடத்தலில் அபிவிருத்திக் குழுத் தலைவர் கந்தசாமி பிரபு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் நழீம் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.