யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களம் கடற்றொழிலாளர்களுக்கான அவசர அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது.எதிர்வரும் (2.3.2025) காலை 09.00 மணியிலிருந்து மாலை 05.00 மணிவரை வடக்கு பருத்தித்துறை கடற்பரப்பிற்கு உயரே 23.2NM NORTH EAST OF PPD
Coordinate(s)of the location 09°55’N,080°42E
, 09°55’N,080°36E, 09°51’N,080°42E, 09°51’N,080°36E ஆகிய கடல் மைல் தொலைவில் இலங்கை கடற்படை கப்பல்களான p423,p433.p483 ஆகிய கலங்களில் இருந்து சூட்டுப்பயிற்சி இடம்பெறவுள்ளது.இந்நிலையில், மேற்குறிப்பிட்ட கடற்பிரதேச எல்லைக்குள் கடற்றொழிலாளர்கள் பிரவேசிப்பதை தவிர்க்குமாறு யாழ் கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள உதவி பணிப்பாளரால் அனைத்து கடற்றொழில் சங்கங்களுக்கும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.