Monday, May 5, 2025
Homeஇலங்கைமுல்லைத்தீவில் மாத்திரைகளை உட்கொண்ட ஒன்றரை வயதுக் குழந்தை உயிரிழப்பு

முல்லைத்தீவில் மாத்திரைகளை உட்கொண்ட ஒன்றரை வயதுக் குழந்தை உயிரிழப்பு

முல்லைத்தீவு – மாங்குளம் – கற்குவாரி பகுதியில் பாதுகாப்பற்ற விதத்தில் வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளை உட்கொண்ட ஒன்றரை வயதுக் குழந்தை ஒன்று உயிரிழந்தது.பெற்றோரால் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளை உட்கொண்ட குழந்தைக்கு சுகவீனமடைந்துள்ளது.இதனையடுத்து குறித்த குழந்தை மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காகக் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தது.குழந்தையின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாங்குளம் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:  ஏறூர் மண்ணை தேசியத்தில் மனக்கச்செய்து கண்ணீருடன் விடைபெற்ற நளீம் எம்பி
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!