வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கில் மணல் கொள்ளை அதிகரித்துள்ளது.இரவோடு இரவாக அதிகமான உழவு இயந்திரங்கள் மூலம் மணல் கடத்தப்பட்டு மருதங்கேணி பகுதிக்கு கொண்டு செல்லப்படுகின்றது.இது தொடர்பாக தகவல் தெரிவிக்கும் மக்களுக்கும் செய்தி வெளிக்கொண்டுவரும் ஊடகவியலாளருக்கும் மணல் கொள்ளையர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது.செம்பியன்பற்று வடக்கில் நாளாந்தம் பாரிய மணல் கொள்ளை இடம்பெறுகின்ற போதும் பொலிசாரோ அதிகாரிகளோ இதுவரை சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன்வரவில்லையென அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்