Tuesday, March 18, 2025
Homeஇலங்கைபளை மத்திய பேரூந்து நிலையத்துக்குள் நடக்கும் அசம்பாவிதம்-பயணிகள் அசெளகரியம்

பளை மத்திய பேரூந்து நிலையத்துக்குள் நடக்கும் அசம்பாவிதம்-பயணிகள் அசெளகரியம்

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் கிளிநொச்சி பளை மத்திய பேரூந்து நிலையத்துக்குள் மோட்டார் சைக்கிள்,மற்றும் துவிச்சக்கர வண்டிகளை நிறுத்துவதாக பயணிகள் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர்.வேலைக்கு செல்வோர்கள் தங்களது பயண வண்டிகளை குறித்த பேரூந்து தரிப்பிடத்திற்குள் நிறுத்திச் செல்வதால் பயணிகள் சிரமங்களை எதிர் நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.அத்துடன் பாடசாலை முடிவடையும் நேரத்தில் சிலர் பளை பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து கொண்டு மாணவர்கள் மற்றும் பயணிகளிடம் அநாவசியமான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் உட்பட பயணிகள் பேரூந்து நிலையத்தை விட்டு வெளியில் வந்து கொட்டும் வெயிலில் நிற்பதோடு,விபத்துக்களும் இதனால் இடம்பெற வாப்பிருப்பதாக அப்பிரதேச மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்
பளை மத்திய பேரூந்து நிலையத்துக்குள் நடக்கும் அசம்பாவிதம்-பயணிகள் அசெளகரியம்
பளை மத்திய பேரூந்து நிலையத்துக்குள் நடக்கும் அசம்பாவிதம்-பயணிகள் அசெளகரியம்
பளை மத்திய பேரூந்து நிலையத்துக்குள் நடக்கும் அசம்பாவிதம்-பயணிகள் அசெளகரியம்

இதையும் படியுங்கள்:  பேய் போல சுற்றித்திரியும் மர்ம உருவத்தால் அச்சத்தில் பதுளை மக்கள்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!