Tuesday, April 22, 2025
Homeஇலங்கைமுன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

நீதிமன்றிலிருந்து பிணைப்பெற்று செல்லும் போது நீதிமன்ற உத்தரவை மீறி சென்ற விதம் குறித்து எதிர்வரும் 25 ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் அவரை நீதிமன்றத்திற்கு வெளியே அழைத்துச் செல்லப் பயன்படுத்திய காரின் உரிமையாளருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. மாத்தறை நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்ததாக தெரிவித்தார்.கடந்த ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி தேசபந்து தென்னகோன் பிணைப்பெற்று மாத்தறை நீதவான் நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியேறிய போது நீதிமன்ற உத்தரவுகளை மீறியுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (21) நீதிமன்றத்தில் மனு ஒன்றின் ஊடாக சமர்ப்பணங்களை முன்வைத்த நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:  யாழில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!