இந்தியாவுடனான எல்லை மூடப்படுவதாக தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு பாகிஸ்தான் அறிவித்துள்ளது.வாகா எல்லை மூடப்படுவதாக இந்தியா அறிவித்த நிலையில் பாகிஸ்தானும் அறிவித்துள்ளது.
பரஸ்பரம் எல்லை மூடப்படுவதாக இரு நாடுகளும் அறிவித்ததால் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு வழியே நடைபெறும் வர்த்தகம் முடங்கியது.மேலும், இந்தியா உடனான அனைத்து வர்த்தகங்களையும் நிறுத்தி வைக்க பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.3 ஆவது நாடுகள் வழியாக மேற்கொள்ளப்படும் வர்த்தகம் உள்பட நிறுத்தி வைக்கப்படுவதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.தங்கள் இறையாண்மை, பாதுகாப்புக்கு எதிரான எல்லா அச்சுறுத்தல்களுக்கும் உறுதியான பதிலடி கொடுக்கப்படும் என பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.