Saturday, April 26, 2025
Homeஇலங்கைவவுனியா மூன்று முறிப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி

வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி

வவுனியா மூன்று முறிப்பு பகுதியில் நேற்று (25) இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மோட்டார்சைக்கிளில் சென்றுகொண்டிருந்த குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் லொறி ஒன்றில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றது. படுகாயமடைந்த அவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.சம்பவத்தில் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் லக்ஸ்மன் பண்டார என்ற பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது மரணம் தொடர்பான விசாரணையினை வவுனியா பொலிசார் மற்றும் திடீர்மரண விசாரணை அதிகாரி ஆகியோர் முன்னெடுத்திருந்தனர்.

இதையும் படியுங்கள்:  அரசியல் பழிவாங்கல் வேண்டாம் - தாயாரின் விடுதலைக்கு உதவுங்கள்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!