Monday, June 30, 2025
Homeஇலங்கை2025 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கையில் வீதி விபத்துக்களில் 965 பேர் உயிரிழப்பு

2025 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கையில் வீதி விபத்துக்களில் 965 பேர் உயிரிழப்பு

இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் மே 13 ஆம் திகதி வரை நாடு முழுவதும் வீதி விபத்துகளில் இந்த இறப்பு எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.குறித்தக் காலகட்டத்தில், 902 போக்குவரத்து விபத்துகளும் பதிவாகியுள்ளன. இதன்போது, 1,842 பேர் கடும் காயங்களுக்கு உள்ளாகியும் உள்ளனர்.கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் முறையற்ற வாகன பராமரிப்பு ஆகியவை பல விபத்துகளுக்குக் காரணம் என்று பொலிஸார் கூறுகின்றனர்.போக்குவரத்து விபத்துகளைக் குறைப்பதற்காக நாடு முழுவதும் ஒரு சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த காவல்துறை திட்டமிட்டுள்ளது.மேலும் அதன் கீழ் சாரதி விழிப்புணர்வு திட்டங்களும் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:  அலுவலகங்களுக்கு வரும் மக்களை கதிரையில் இருத்திவிட்டு அரச பணியாளர்கள் சேவை வழங்க வேண்டும்-ஆளுநர் நா.வேதநாயகன்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!