Friday, June 6, 2025
Homeஇலங்கையாழ் மாநகர சபை முதல்வர் பிரதி முதல்வர் தெரிவு இழுபறியில்

யாழ் மாநகர சபை முதல்வர் பிரதி முதல்வர் தெரிவு இழுபறியில்

வடக்கு மாகாணம் உள்ளூராட்சி திணைக்களத்தின் கீழ் உள்ள யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான முதல்வர், பிரதி முதல்வர் தெரிவு வெள்ளிக்கிழமை (13) காலை 8.30 மணிக்கு நடைபெறவுள்ளது என வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு அறிவித்துள்ளார்.வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராகிய தேவந்தினி பாபு 2012 ஆம் ஆண்டின் 22 ஆம் இலக்க உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டத்தின் 66 (இ) பிரிவின் கீழ் எனக்கு அளிக்கப்பட்ட தத்துவங்களின் பிரகாரம் வடக்கு மாகாணத்திற்குள் அமைந்துள்ள உள்ளூராட்சி அதிகார சபைகளிற்கான முதல்வர்/தவிசாளர், பிரதி முதல்வர்/உப தவிசாளர் ஆகியோரைத் தேர்ந்தெடுப்பதற்கான முதலாவது கூட்டம் நேர அட்டவணையின் பிரகாரம் குறிக்கப்பட்ட இடங்களில் கூட்டப்படுகின்றது என்பதனை வடக்கு மாகாணத்தின் கிழ் உள்ள உள்ளாராட்சி சபைகளுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.அதேவேளை இலங்கையின் பிற மாவட்டகளில் மாநகர சபைக்கான முதல்வர்கள் பத்விகளை ஏற்றுள்ள நிலையில் யாழ்ப்பாணம் மாநகர சபை மட்டும் இழுபறியில் உள்ளது.

இதையும் படியுங்கள்:  இரத்த உறவுகளால் படுகொலை செய்யப்பட்ட இளைஞன்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!