இன்றையதினம் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் கடத்திச் சென்ற டிப்பருடன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.கைதடி பகுதியில் வைத்து 45 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை தற்போது சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், விசாரணைகளின் பின்னர் நாளையதினம் அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அனுமதிப்பத்திரம் இன்றி மணல் கடத்தியவர் யாழில் கைது
RELATED ARTICLES