Home » இன்று 20,000 ரூபாயால் பாரிய அளவில் அதிகரித்த தங்க விலை

இன்று 20,000 ரூபாயால் பாரிய அளவில் அதிகரித்த தங்க விலை

by newsteam
0 comments
இன்று 20,000 ரூபாயால் பாரிய அளவில் அதிகரித்த தங்க விலை

நேற்று மாலை வரை 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 345,000 ரூபாயாக விற்பனையாகி வந்த நிலையில், இன்று 20,000 ரூபாயால் அதிகரித்து, தற்போது 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 365,000 ரூபாயாக விற்பனையாகி வருவதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் தற்போது, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 365,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.22 கரட் தங்கம் பவுண் ஒன்று 337,600 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,625 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 42,125 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.உலகின் பொருளாதார மற்றும் அரசியல் நிலை குறித்த கவலைகளுக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளைத் தேடுவதால், தங்கத்தின் விலை முதல் முறையாக இவ்வாறு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!