Wednesday, June 18, 2025
Homeஇலங்கைஇரண்டு மாதங்களுக்கு தேவையான எரிபொருள் உள்ளது என எரிசக்தி அமைச்சு தெரிவிப்பு

இரண்டு மாதங்களுக்கு தேவையான எரிபொருள் உள்ளது என எரிசக்தி அமைச்சு தெரிவிப்பு

எரிபொருள் பற்றாக்குறை குறித்த போலிச் செய்திகளை நம்ப வேண்டாம்: எரிசக்தி அமைச்சு
எரிபொருள் பற்றாக்குறை குறித்த போலி மற்றும் தவறான செய்திகளால் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என எரிசக்தி அமைச்சு வலியுறுத்தியுள்ளது.மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக இலங்கையில் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று சமூக ஊடகங்களில் பரவும் தவறான செய்திகளை அவதானித்துள்ளதாக அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேவையான எரிபொருள் இருப்பு இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் உள்ளதாகவும், முன்கூட்டியே ஆர்டர் செய்யப்பட்ட எரிபொருள் இருப்புகளைப் பெற தேவையான நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.எனவே, பொதுமக்கள் போலிச் செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என எரிசக்தி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

இதையும் படியுங்கள்:  இலங்கை அமைச்சரவை மறுசீரமைப்பின் போது பிரதமர் பதவிக்கு பிமலின் பெயர் பரிந்துரை - உதய கம்மன்பில
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!