அரசாங்க சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப கட்டமான ‘GovPay’ 2025 பெப்ரவரி 7ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது. “இந்த புதிய முயற்சியானது, பாதுகாப்பான மற்றும் திறனான டிஜிட்டல் தளம் மூலம் தடையற்ற பரிவர்த்தனைகளை செயல்படுத்தும், அரசு நிறுவனங்கள் பணம் செலுத்தும் விதத்தை நெறிப்படுத்தி நவீனப்படுத்தும்” என்று ஜனாதிபதி அலுவலகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.