இலங்கையின் 77வது சுதந்திரதின நிகழ்வு நேற்று (4)யாழ். வடமராட்சி கிழக்கு மணற்காட்டில் சிறப்பாக இடம்பெற்றது.காலை 10.00 மணியளவில் மருதங்கேணி 10வது விஜய பாகு இராணுவ படையணியின் பொறுப்பதிகாரி தலைமையில் நிகழ்வு ஆரம்பமானது.இந்நிகழ்வில் மணற்காடு அந்தோனியார் ஆலய வளாகத்தை சுற்றி மரக்கன்றுகள் நாட்டப்பட்டதுடன் பொதுமக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.