Wednesday, June 18, 2025
Homeஇலங்கைகடமை நேரத்தில் கள்ளக்காதலியுடன் உல்லாசம் அனுபவித்த பொலிஸ் சார்ஜன்ட் பணி இடை நிறுத்தம்

கடமை நேரத்தில் கள்ளக்காதலியுடன் உல்லாசம் அனுபவித்த பொலிஸ் சார்ஜன்ட் பணி இடை நிறுத்தம்

கடமை நேரத்தில் கள்ளக்காதலியுடன் உல்லாசம் அனுபவித்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடை நிறுத்தம் செய்ய்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், நாவலப்பிட்டிய நீதிமன்றில் ஒரு வழக்கு தொடர்பாக சாட்சியம் அளிக்கச் சென்ற மேற்படி கம்பளைப் பொலிஸ் நிலைய சார்ஜன்ட் ஒருவரே பணி இடை நிறுத்தம் செய்ய்பட்டுள்ளார்.நாவலப்பிட்டிய பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் கள்ளக்காதலியுடன் இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, குறிப்பிட்ட பெண்ணின் தாயும் சகோதரனும் அங்கு சென்றுள்ளனர் அதன்போது இரு தரப்பினருக்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.இதனையடுத்து பொலிஸ் அதிகாரி 20 வயதுடைய தனது காதலியுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். மேற்படி சம்பவத்தில் தான் காயமடைந்ததாக பெண்ணின் தாயார் நாவலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று செய்துள்ளார்.அதன் அடிப்படையில் விசாரணை செய்த பொலிஸார் சந்தேக நபரை தற்காலிகமாக பணி இடை நிறுத்தம் செய்துள்ளனர்.
இவர் திருமணமானவர் என்றும் இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும் தெரிவிக்கப்படுகிறது.இவர் ஏற்கனவே நாவலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் சேவை செய்து அங்கிருந்து கம்பளைக்கு இடமாற்றம் பெற்றவர் எனவும் கம்பளைப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்:  மீண்டும் வடக்கில் கிறீஸ் பூதம்? - ஈ.பி.டி.பி. சந்தேகம்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!