Sunday, September 21, 2025
Homeஇலங்கைகொடிகாமம் பகுதியில் சட்டவிரோதமாக மரக்குற்றிகள் கடத்தல் – லொறி ஓட்டுநர் கைது

கொடிகாமம் பகுதியில் சட்டவிரோதமாக மரக்குற்றிகள் கடத்தல் – லொறி ஓட்டுநர் கைது

கொடிகாமம் பகுதியில் அனுமதிப்பத்திரம் இல்லாமல் ஒரு சிறிய ரக லொறியில் மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற ஒருவரை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளனர்.கைதடி பகுதியில் வீதி சோதனை நடத்திய பொலிஸார் அந்த லொறியை நிறுத்தி சோதனை மேற்கொண்டபோது,மரக்குற்றிகளை கொண்டு செல்ல அனுமதி பத்திரம் இல்லாமையை கண்டறிந்தனர்.பரிசோதனையில், பல இலட்சம் மதிப்புள்ள மரக்குற்றிகள் சட்டவிரோதமாக கடத்த முயற்சிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.சாவகச்சேரி பொலிஸார் சம்பவ தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:  இலங்கையில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் ஆடைகளுக்கான புதிய வரி
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!