Saturday, June 28, 2025
Homeஇலங்கைசெம்மணி மனித புதைகுழியில் மேலும் இரண்டு மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில் மேலும் இரண்டு மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி மனித புதைகுழியில் நேற்றைய தினம் (27) மேலும் இரண்டு மனித எலும்புக்கூடுகளும் சில எலும்பு சிதிலங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் இரண்டாவது நாள் நேற்று முன்னெடுக்கப்பட்டது. நேற்றைய அகழ்வுப் பணிகளின்போது இரண்டு மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகள் நேற்று அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளுக்கு 45 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், முதல் கட்டமாக 15 நாட்கள் தொடர்ச்சியாக பணிகள் நடைபெறும். பின்னர், சிறு கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பணிகள் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:  செம்பியன்பற்றில் வீதி போக்குவரத்து தொடர்பில் பொலிசாரால் மாணவர்களுக்கு தெளிவூட்டல்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!