மின்னேரிய ஆயுர்வேத மருத்துவமனை வளாகத்துக்குள் நுழைந்த காட்டு யானை, ஒரு ஜன்னலை உடைத்து, நோயாளிகள் வைத்திருந்த பொருட்களை வெளியே எடுத்து உண்டதுடன், படுக்கை மற்றும் இரும்புப் பெட்டியை சேதப்படுத்தியுள்ளது.ஊழியர்கள் கூச்சலிட்டு, அந்த காட்டு யானையை விரட்டியடித்ததாகக் கூறினர். காட்டு யானைகள் அடிக்கடி மருத்துவமனையைத் தாக்கி சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதாகவும், இதனால் ஆபத்து ஏற்படக்கூடும் என்ற அச்சத்தில் தொடர்ந்து இருப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.மருத்துவமனையைப் பாதுகாக்க மின் வேலி அமைக்க வேண்டும் என்ற தங்கள் பலமுறை கோரிக்கைகளை முன்வைத்த போதிலும் அதிகாரிகள் காது கேளாதவர்களாக இருப்பதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
மின்னேரிய மருத்துவமனையில் காட்டு யானை தாக்குதல் – மின் வேலி கோரிக்கை
4