எல்ல – வெல்லவாய வீதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.பேருந்தை முறையாக பாராமரிக்கத் தவறிய குற்றச்சாட்டிலே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 4 ஆம் திகதி எல்ல – வெல்லவாய பகுதியில் சுற்றுலா சென்ற பேருந்து ஒன்று 1000 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.