Tuesday, August 19, 2025
Homeஇலங்கைகுடும்பத் தகராறில் தீ வைத்த கணவன் – வீட்டில் உரிமையாளர் ஓட்டமாவடி பொலிஸாரால் கைது

குடும்பத் தகராறில் தீ வைத்த கணவன் – வீட்டில் உரிமையாளர் ஓட்டமாவடி பொலிஸாரால் கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓட்டமாவடி 3 ஆம் வட்டாரம் எம்.கே. வீதியிலுள்ள வீடொன்று இன்று திங்கட்கிழமை (18) காலை தீப்பற்றி எரிந்துள்ளது.ஓட்டமாவடி பிரதேச சபை ஊழியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இணைந்து வீட்டில் பரவிய தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.தீப்பற்றிய வீட்டுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன் வீட்டில் இருந்த அனைத்துப் பொருட்களும் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன.இந்த தீ வைப்பு சம்பவம் தொடர்பில் வீட்டு உரிமையாளரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளனர். குடும்பத் தகராறு காரணமாக இந்த தீ வைப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.குறித்த இடத்துக்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்த பண்டார ஆகியோர் விஜயம் செய்திருந்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:  நாட்டின் வானிலையில் திடீர் மாற்றம்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!