Wednesday, May 21, 2025
Homeவிளையாட்டு செய்திசர்வதேச கிரிக்கட்டிலிருந்து அஸ்வின் ஓய்வு

சர்வதேச கிரிக்கட்டிலிருந்து அஸ்வின் ஓய்வு

இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.இந்திய கிரிக்கெட் அணியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த அஸ்வினின் சாதனைகளுக்காக வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், அஸ்வினின் சாதனைகளுக்காக பிசிசிஐ நன்றி தெரிவித்துள்ளது. இந்தியா-அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையே, அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இன்று(18) நடைபெற்ற டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அஸ்வின் இந்த முடிவை அறிவித்தார்.

இதுவரை, 38 வயதான அஸ்வின் 106 போட்டிகளில் விளையாடியுள்ளார், 537 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.அவர், 8 முறை ஒரே போட்டியில் 10 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். ஆறு முறை சதம் அடித்துள்ள அஸ்வின், 14 முறை அரை சதம் அடித்துள்ளார்.”அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் இதுதான் எனது கடைசி நாள். ஒரு கிரிக்கெட்டராக எனக்குள் இன்னும் திறமை இருப்பதாகவே உணர்கிறேன். ஆனாலும், க்ளப் அளவிலான கிரிக்கெட்டில் அதைக் காட்ட விரும்புகிறேன். சர்வதேச கிரிக்கெட்டில் இன்றுதான் எனது கடைசி நாள்,” காபா டெஸ்டை தொடர்ந்து ஊடகவியலாளர்களிடம் அஸ்வின் தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்:  வவுனியாவில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தி பணம் பறித்த இளைஞர் குழு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!