Monday, September 15, 2025
Homeஇலங்கைமாகாணசபைத் தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாட அரசாங்கத் தீர்மானம்

மாகாணசபைத் தேர்தல் தொடர்பாக அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாட அரசாங்கத் தீர்மானம்

மாகாணசபைத் தேர்தல் குறித்து நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளுடன் எதிர்வரும் மாதத்தில் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.அதன்படி, சகல தரப்பினரும் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வந்தால் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த முடியும் என மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் பொது நிர்வாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.மாகாண சபைத் தேர்தல் குறித்து எமது செய்தி சேவை வினவிய போது அவர் இதனைத் தெரிவித்தார். மாகாண சபைகள் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல், அரச அதிகாரிகளால் நிர்வகிக்கப்படுவது ஜனநாயகத்துக்குப் பொருத்தமற்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.ஆகவே, மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாகவுள்ளது. எனினும், மாகாண சபைத் தேர்தலைப் பழைய தேர்தல் முறையில் நடத்துவதா அல்லது புதிய முறையில் நடத்துவதா என்பதே தற்போதுள்ள பிரச்சினை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுவந்தாலும் தேர்தலை நடத்தும் திகதியை நிச்சயமாகக் குறிப்பிட முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.மாகாணசபைத் தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டதன் பின்னர் தாமதமில்லாமல் மாகாணசபைத் தேர்தலை நிச்சயம் நடத்த முடியும் என்றும் அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்:  யாழ்- நாகர்கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய மர்ம வீடு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!