Home இந்தியா மின்சாரம் பாய்ச்சி கணவரை கொன்ற மனைவி – சமூக ஊடகத்தில் சிக்கிய கொலை ரகசியம்

மின்சாரம் பாய்ச்சி கணவரை கொன்ற மனைவி – சமூக ஊடகத்தில் சிக்கிய கொலை ரகசியம்

0
மின்சாரம் பாய்ச்சி கணவரை கொன்ற மனைவி – சமூக ஊடகத்தில் சிக்கிய கொலை ரகசியம்

டெல்லி உத்தம் நகரை சேர்ந்தவர் கரண் தேவ் (வயது 36). இவரது மனைவி சுஷ்மிதா. கரண்தேவின் உறவினர் ராகுல் (24). ராகுல் அடிக்கடி சகோதரர் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம்.அப்போது சுஷ்மிதாவுடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. கரண்தேவ் வேலைக்கு சென்ற பிறகு சுஷ்மிதா ராகுலுடன் வீட்டில் உல்லாசமாக இருந்து வந்தார். இவர்களது கள்ளக்காதல் விவகாரம் கரண்தேவுக்கு தெரியவந்தது.கள்ளக்காதலை கைவிடுமாறு மனைவியிடம் அடிக்கடி சண்டையிட்டு வந்தார்.இதனால் கள்ளக்காதலுக்கு இடையூறாக உள்ள கணவரை தீர்த்துக்கட்ட சுஷ்மிதா முடிவு செய்தார்.அதன்படி கடந்த 13-ந்தேதி இரவு கணவருக்கு கொடுத்த உணவில் 15 தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்தார். தூக்க மாத்திரை கலந்த உணவை சாப்பிட்ட கரண் தேவ் சாகாமல் மயங்கி கிடந்தார்.சுஷ்மிதா, ராகுலுக்கு போன் செய்து தனது வீட்டிற்கு வரவழைத்தார். பின்னர் இருவரும் சேர்ந்து கரண் தேவின் உடலில் மின்சாரம் பாய்ச்சி துடிதுடிக்க கொலை செய்தனர்.இதையடுத்து கரண் தேவை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு கரண்தேவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

கரண்தேவின் உறவினர்களிடம் மின்சாரம் தாக்கியதில் கணவர் இறந்து விட்டதாக சுஷ்மிதா தெரிவித்தார். மின்சாரம் தாக்கி இறந்ததால் கரண் தேவின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் வாங்கிச் சென்ற உறவினர்கள் இறுதி சடங்குகள் செய்தனர்.இந்த நிலையில் கரண்தேவின் சகோதரர் குணால் சுஷ்மிதாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆய்வு செய்தார். அதில் சுஷ்மிதா ராகுலுடன் நீண்ட நேரம் அரட்டை அடித்தது தெரியவந்தது. மேலும் கணவரை கொலை செய்வது குறித்து ராகுலுடன் ஆலோசித்ததும் தெரிந்தது.போலீசார் சுஷ்மிதா மற்றும் அவரது கள்ளக்காதலன் ராகுல் ஆகியோரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version