தங்காலை கடற்கரை பகுதியில் பல நாள் மீன்பிடி படகு கவிழ்ந்ததில், 2 கடற்றொழிலாளர்களைக் காணவில்லை என்று கடற்படை தெரிவித்துள்ளது. படகில் 6 கடற்றொழிலாளர்கள் இருந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது. குறித்த விபத்தில் 4 கடற்றொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட கடற்றொழிலாளர்கள் சிகிச்சைக்காக, தங்காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.