Monday, June 30, 2025
Homeஇலங்கையாழில் கிணற்றல் தவறி விழுந்த இரண்டு வயது ஆண் குழந்தை உயிரிழப்பு

யாழில் கிணற்றல் தவறி விழுந்த இரண்டு வயது ஆண் குழந்தை உயிரிழப்பு

யாழ். பருத்தித்துறை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீட்டுக்கு கிணற்றல் தவறி விழுந்த இரண்டு வயது ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.நேற்று சனிக்கிழமை மாலை கிணற்றடி வைரவர் கோவிலடி, குரும்பைகட்டி, புலோலியில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் இரண்டு தினங்களிற்கு முன்னர் தனது பிறந்த நாளை கொண்டாடிய ஆண் குழந்தையே உயிரிழந்துள்ளது.கிணற்றில் விழுந்த நிலையில் மீட்க்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது குழந்தை ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.குழந்தையின் சடலம் மரண விசாரணைக்காகவும் பிரேத பரிசோதனைக்காகவும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள்:  கார் பந்தயம் முடியும் வரை நடிக்கப்போவதில்லை- நடிகர் அஜித்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!