Sunday, July 27, 2025
Homeஇலங்கையாழில் கொட்டடி பகுதியைச் சேர்ந்த மது போதையில் நபரொருவர் தற்கொலை

யாழில் கொட்டடி பகுதியைச் சேர்ந்த மது போதையில் நபரொருவர் தற்கொலை

யாழ்ப்பாணம், கொட்டடி பகுதியைச் சேர்ந்த பற்றிக்கிளே ஜோபாஸ் (வயது 48) என்பவர், நேற்று (25) இரவு அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்தி, தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.குறித்த நபர் நேற்றிரவு மதுபானம் அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து உணவு உண்ட பின்னர் உறங்கியுள்ளார்.இந்நிலையில், அதிகாலை 4:15 மணியளவில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.உடனடியாக அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தினர்.
சடலத்தின் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.அளவுக்கு அதிகமாக மதுபானம் அருந்தியதால் தன்நிலை மறந்து இவர் உயிரை மாய்த்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்:  வட மாகாணத்தின் 12-40 வயதுக்குட்ட 50 வீதமானோர் மின்னஞ்சலை பயன்படுத்துவதில்லை - ஆய்வில் தகவல்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!