Friday, July 4, 2025
Homeஇலங்கையாழ்ப்பாணம் செம்மணியில் 40 மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம் செம்மணியில் 40 மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் எட்டாம் நாள் பணிகள் இன்று (03) முன்னெடுக்கப்பட்டன.இன்றைய அகழ்வுடன் மொத்தம் 40 மனித எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 34 முழுமையான மனித எலும்புக்கூடுகளும், மேலதிகமாக 6 எலும்புக்கூடு தொகுதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இதில் இரண்டு எலும்புக்கூடுகள் குழந்தைகளுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.இந்த அகழ்வு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி A.A. ஆனந்தராஜாவின் மேற்பார்வையில், தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவா மற்றும் சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றது.
அகழ்ந்தெடுக்கப்பட்ட 34 முழுமையான எலும்புக்கூடுகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் தடயவியல் மற்றும் மானிடவியல் பிரிவில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:  அரசாங்க சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான ஆரம்ப கட்டமாக ‘Gov Pay’ என்ற திட்டம்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!