Thursday, August 7, 2025
Homeஇலங்கைஅரச சேவையின் நவீனமயமாதற்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் – ஜனாதிபதி உறுதி

அரச சேவையின் நவீனமயமாதற்காக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் – ஜனாதிபதி உறுதி

அரச சேவையை நவீனத்துவ கலாச்சாரத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும் எனவும், அதனைப் பாதுகாப்பதற்கு அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.அலரி மாளிகையில் நடைபெற்ற இலங்கை நிர்வாக சேவை சங்கத்தின் 41 ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போது, அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், அடுத்த ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டத்தில், பௌதீக வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் சிதைந்துபோன அரச சேவையை நவீனமயமாக்குவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அரச சேவையை வலுப்படுத்தும் வகையில், 2027ஆம் ஆண்டுக்கான அரச ஊழியர்களின் வேதன உயர்வுக்காக 11 ஆயிரம் கோடி ரூபாயை ஒதுக்குவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்:  அர்ச்சுனா எம்.பிக்கு எதிராக 19 வழக்குகள்
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!