அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பு விலக்கிகொள்ளப்பட்டுள்ளது.
தமது கோரிக்கைகள் தொடர்பில், சுகாதார அமைச்சர் வழங்கிய உறுதியை அடுத்து பணிப்புறக்கணிப்பை விலக்கிக்கொண்டதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.இதேவேளை, கடந்த 7 நாட்களாக பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த அஞ்சல் ஊழியர்கள் இன்று முதல் வழமையான பணிகளுக்கு திரும்புகின்றனர் இந்தநிலையில், பணிப்புறக்கணிப்பால் குவிந்திருந்த அஞ்சல் பொதிகளை விநியோகிக்கும் பணி நேற்று நள்ளிரவு முதல் தொடங்கியதாக அஞ்சல் மா அதிபர் தெரிவித்தார்.