எல்ல – வெல்லவாய பிரதான வீதியில் நேற்று (04) இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 இலட்சம் ரூபாய் வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.முன்னதாக நேற்று இரவு இடம்பெற்ற இந்த விபத்தில் 15 பேர் வரை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.