Saturday, June 28, 2025
Homeஇலங்கைகுடும்பத் தகராறு காரணமாக மனைவி விவாகரத்து கோரியதால் விபரீத முடிவெடுத்த கணவர்

குடும்பத் தகராறு காரணமாக மனைவி விவாகரத்து கோரியதால் விபரீத முடிவெடுத்த கணவர்

பதுளை – எல்ல பிரதேசத்தில் குடும்பத் தகராறு காரணமாக மனைவி விவாகரத்து கோரியதால் கணவர் உயிர்மாய்க்க முயன்றுள்ளார் என்று எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பில் தெரியவருவதாவது,குறித்த பகுதியில் வசிக்கும் ஒரு கணவன், மனைவிக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவி எல்ல பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.அதனையடுத்து விசாரணைகளுக்காக கணவரும் எல்ல பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டார்.இருவரது விசாரணையில் மனைவி பொலிஸ் நிலையத்தில் வைத்து கணவரிடம் விவாகரத்து கோரியுள்ளார்.மனைவி விவாகரத்து கோரியதை ஏற்றுக்கொள்ள முடியாமல் கணவர் பொலிஸ் நிலையத்திற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் மறைத்து வைத்திருந்த விஷ பானத்தை அருந்தி உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றுள்ளார்.விஷம் அருந்தியதில் சுகவீனமடைந்த குறித்த நபரை பொலிஸ் அதிகாரிகள் சிலர் தெமோதரை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:  யாழ்ப்பாணத்தில் கோலாகலமாக ஆரம்பமான சர்வதேச வர்த்தக கண்காட்சி
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!