Sunday, June 8, 2025
Homeஇலங்கைதனியார் பேருந்தொன்றில் இளம் பெண்களிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது

தனியார் பேருந்தொன்றில் இளம் பெண்களிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது

நாவலப்பிட்டியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார் பேருந்தொன்றில் இளம் பெண்களிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட இளைஞர்கள் இருவர் பேருந்து நடத்துனரை ​​தாக்கி காயப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கடவத்தை கிரில்லவல அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் இன்று (07) காலை இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.குறித்த இரண்டு இளைஞர்களும் பேருந்தில் ஏறி, பல அருக்கைகள் முழுவதுமாக காலியாக இருந்தபோதிலும், இளம் பெண்களுக்கு அருகில் அமர்ந்து பாலியல் சேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.பல சந்தர்ப்பங்களில் இவ்வாறு நடந்து கொண்டிருந்ததை அவதானித்த பேருந்து நடத்துனர் இளைஞர்களை எச்சரித்துள்ளார். இதன் போது சந்தேக நபர்களில் ஒருவர் நடத்துனரை சிறிய கத்தியால் தாக்க முயன்றுள்ளார்.பேருந்து, கிரில்லவல அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் நின்றதும், சந்தேக நபர்கள் இருவரும் வீதியில் அமைக்கப்பட்டிருந்த மரக் கம்பத்தை உடைத்து, நடத்துனரை கொடூரமாகத் தாக்கி தப்பி சென்றுள்ளனர்.பேருந்தின் பயணிகளும் உள்ளூர்வாசிகளும் சந்தேக நபர்கள் இருவரையும் துரத்தி பிடித்து, கட்டி வைத்து தாக்கியுள்ளனர். பின்னர் இரண்டு சந்தேக நபர்களையும் கடவத்தை பொலிஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக பேருந்தின் ஓட்டுநர் பொலிஸில் புகார் அளித்துள்ளதுடன், தாக்குதலில் காயமடைந்த நடத்துனரை மருத்துவமனையில் அனுமதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சந்தேகத்திற்குரிய இரண்டு இளைஞர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளதாகவும், நாளை (08) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்:  தாயை எரித்து கொலை செய்த சம்பவம் - மேலும் ஒருவர் கைது
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!