Friday, June 20, 2025
Homeஇலங்கைதெஹிவளையில் உள்ள ஆடை தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து

தெஹிவளையில் உள்ள ஆடை தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து

தெஹிவளை- பெபிலியான, திவுலபிட்டிய பிரதேசத்தில் உள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை மாநகர சபை தெரிவித்துள்ளது.குறித்த தீ விபத்தானது நேற்று (18) இரவு 11.30 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தீ விபத்தின் போது ஆடை தொழிற்சாலையிலிருந்த பல்வேறு பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயணைப்பு படையினர் இணைந்து இன்று புதன்கிழமை (19) அதிகாலை 05.00 மணியளவில் தீ பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளதாக தெஹிவளை – கல்கிஸ்ஸை மாநகர சபை மேலும் தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்:  அகரம்" முதல் கல்வி அகிலமெல்லாம் வென்றிட வாழ்த்துவதாக மாவடிப்பள்ளி அதிபர் ரஜாப்தீன் தெரிவிப்பு
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments

error: Content is protected !!