Home இலங்கை நண்பரால் தாக்கப்பட்டு நீரில் மூழ்கடிக்கப்பட்டு கொலை — ஒருவர் கைது

நண்பரால் தாக்கப்பட்டு நீரில் மூழ்கடிக்கப்பட்டு கொலை — ஒருவர் கைது

0
நண்பரால் தாக்கப்பட்டு நீரில் மூழ்கடிக்கப்பட்டு கொலை — ஒருவர் கைது

திஸ்ஸமஹாராம பொலிஸ் பிரிவின் சந்துங்கம பிரகதி மாவத்தை பகுதியில் உள்ள கால்வாயிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.நேற்று (17) மாலை திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.இறந்தவர் திஸ்ஸமஹாராம பகுதியைச் சேர்ந்த 45 வயதானவர் என தெரியவந்துள்ளது.தனிப்பட்ட தகராறு காரணமாக இறந்தவர் தனது நண்பர் ஒருவரால் போத்தலால் தாக்கப்பட்டு நீரில் மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பாக 24 வயதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை திஸ்ஸமஹாராம பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version