Home இலங்கை மடு பிரதேசத்தில் அரச பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்த பாடசாலை மாணவி மீது பஸ்ஸில் பயணித்த இராணுவ...

மடு பிரதேசத்தில் அரச பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்த பாடசாலை மாணவி மீது பஸ்ஸில் பயணித்த இராணுவ சிப்பாய் கைது

0
மடு பிரதேசத்தில் அரச பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்த பாடசாலை மாணவி மீது பஸ்ஸில் பயணித்த இராணுவ சிப்பாய் கைது

மன்னார் மடு பிரதேசத்தில் அரச பஸ்ஸில் பயணித்துக் கொண்டிருந்த பாடசாலை மாணவி மீது பஸ்ஸில் பயணித்த இராணுவ சிப்பாய் ஒருவர் பாலியல் சேட்டை மேற்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மடு பிரதேசத்தில் இருந்து முருங்கன் பகுதியில் உள்ள பாடசாலைக்கு சென்றபோதே மாணவி இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். இன்று புதன்கிழமை (18) காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த மாணவி மடு பகுதியில் இருந்து அரச பஸ்ஸில் பாடசாலைக்கு பயணித்துக் கொண்டிருந்த நிலையில் குறித்த பஸ்ஸில் பயணித்த இராணுவ சிப்பாய் மாணவிக்கு பாலியல் சேட்டை புரிந்துள்ளார்.அதனைத் தொடர்ந்து பாடசாலை மாணவி முருங்கன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் முருங்கன் பொலிஸார் இராணுவ சிப்பாயியை கைது செய்துள்ளனர்.மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version