Home இந்தியா இன்ஸ்டா காதலனுடன் சென்ற தாய் – 2 வயது மகன் பேருந்து நிலையத்தில் தவிப்பு

இன்ஸ்டா காதலனுடன் சென்ற தாய் – 2 வயது மகன் பேருந்து நிலையத்தில் தவிப்பு

0
இன்ஸ்டா காதலனுடன் சென்ற தாய் – 2 வயது மகன் பேருந்து நிலையத்தில் தவிப்பு

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தனது 2 வயது மகனை பேருந்து நிலையத்தில் தனியாக தவிக்கவிட்டு, ஆண் நண்பருடன் தாய் பைக்கில் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தனது 2 வயது மகனை பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு இன்ஸ்டாவில் பழக்கமான ஆண் நண்பருடன் தாய் சென்றுள்ளார். தாய் இல்லாமல் குழந்தை அழுது கொண்டிருந்ததை பார்த்த பேருந்து நிலைய ஊழியர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விரைந்து விசாரணை நடத்தி, சில மணி நேரங்களுக்குள் அந்தப் பெண்ணையும் அவரது ஆண் நண்பரையும் கண்டுபிடித்தனர்.அதைத் தொடர்ந்து போலீசார் அவரது கணவரைத் தொடர்பு கொண்டு குழந்தையை தந்தையிடம் ஒப்படைத்தனர்.இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version