Home இலங்கை இலஞ்சம் பெற்ற பொது சுகாதார பரிசோதகர் கைது

இலஞ்சம் பெற்ற பொது சுகாதார பரிசோதகர் கைது

0
இலஞ்சம் பெற்ற பொது சுகாதார பரிசோதகர் கைது

மட்டு கரடியானாறு பகுதியில் கடை ஒன்றிற்கு அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக 6,000 ரூபா இலஞ்சமாக வாங்கிய பொது சுகாதார பரிசோதகர் இன்று (29) கைது செய்யப்பட்டுள்ளார்.பொது சுகாதார பரிசோதகரை, அதிகாரிகள் மாறுவேடத்தில் சென்று சுற்றிவளைத்து கைது செய்துள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர்.குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் உணவு கடை ஒன்றை அமைப்பதற்காக கரடியனாறு சுகாதார பிரிவில் கடமையாற்றிவரும் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரிடம் அனுமதி கேட்டுள்ளார்.இந் நிலையில, அவர் அதற்கு இலஞ்சமாக 6,000 ரூபாவை கோரியுள்ளார்.இதனையடுத்து கடை உரிமையாளர் கொழும்பிலுள்ள இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்கழுவிடம் முறைப்பாடு செய்ததையடுத்து, அவர்களின் வழிகாட்டலில் சம்பவதினமான இன்று பகல் 12.00 மணியளவில் கரடியனாறு பகுதியில் உள்ள வீதியொன்றில் இலஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவினர் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.இதன்போது மோட்டார் சைக்கிளில் சென்ற பொது சுகாதார பரிசோதகர் கடை உரிமையாளரிடம் இலஞ்சமாக 6,000 ரூபாவை வாங்கியபோது மாறுவேடத்தில் காத்திருந்த இலஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவினர் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் 54 வயதுடையவர் எனவும், அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக இலஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவினர் தெரிவித்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Content is protected !!
Exit mobile version